எனது வலைக்கு வருகை தரும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

Friday, 27 April 2012

KEO நடத்தும் பெண்களுக்கான கோடை விடுமுறை மார்க்கக் கல்வி பயிற்சி முகாம்.....

KEO நடத்தும் பெண்களுக்கான கோடை விடுமுறை மார்க்கக் கல்வி பயிற்சி முகாம்.....

Saturday, 25 February 2012

மஹ்பூப் சுப்ஹானி கமிட்டியின் அழைப்பிதழ்



ஃபேஸ்புக்...

சோஷியல் மீடியா பற்றி சுவையான செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கையில், இதய துடிப்பையே நிறுத்துவது போல ஒரு புதிய செய்தியும் முளைத்து இருக்கிறது. எப்பொழுதும் ஃபேஸ்புக், எங்கேயும் ஃபேஸ்புக் என்று பயன்படுத்தும் குழந்தைகள் மன ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஃபேஸ்புக் எல்லோரையும் ஃபேஸ்புக் அடிமையாக மாற்றுவதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் நிறைய தகவல்கள் பரிமாறப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் மனநல நிபுணர்கள் கூறுவதை பார்த்தால் ஃபேஸ்புக்கிற்கு இன்னொரு முகமும் இருப்பதாக தெரிகிறது. எந்த நேரமும் ஃபேஸ்புகே கதி என்று உட்கார்ந்து இருப்பவர்கள் இது போன்ற மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இப்பொழுதெல்லாம் ஃபேஸ்புக் பெரியவர்களை விட சிறியவர்களால் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஃபேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதை ஃபேஸ்புக் மானியா என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். சோஷியல் மீடியா போன்ற எந்த ஒரு விஷயங்களையும் தேவைக்கு பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் போது அதன் விபரீதங்கள் அதிகமாகவே இருக்கின்றது. இதனால் தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக்கை தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துவது நல்லது. ஃபேஸ்புக் குழந்தைகளின் மனதை பெரும் அளவில் மாற்றுகிறது என்ற இந்த விஷயம் சற்று திகிலை ஏற்படுத்துவதாக தான் உள்ளது. எனவே, பெற்றோர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தும் தங்களது குழந்தைகள் மீது ஒரு கண் வைப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே

Friday, 24 February 2012

Tuesday, 21 February 2012

Saturday, 18 February 2012


Tuesday, 14 February 2012

கூத்தாநல்லூரில் மின்வினியோகம் நிருத்தம் செய்யப்படும் நேர விபரம் ...


Thursday, 19 January 2012

கடும் குளிர்....

         வானம் தெளிவாகவும், குளிர் அலை வீசுவதாலும் அடுத்த இரண்டு இரவுகளுக்கு தமிழகத்தில் கடும் பனிப்பொழிவும், கடும் குளிரும் வாட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கத்திற்கு விரோதமாக கடும் பனிப் பொழிவும், குளிரும் நிலவுகிறது. இதனால் மக்கள் மாலைக்கு மேல் கூடுகளைத் தேடி ஓடும் பறவைகளைப் போலவே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். வெளியில் தலை காட்டினால் கடும் பனியில் சிக்கி பலவித வியாதிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

இரவில் கடும் பனியுடன், கடும் குளிரும் அடிப்பதால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஏன் இந்த அதீத பனிப்பொழிவு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் விளக்குகையில்,

குளிர் அலை தற்போது வீசி வருகிறது. வானமும் தெளிவாக உள்ளது. இதுவே அதிக அளவிலான பனிப்பொழிவுக்கும், கடும் குளிருக்கும் காரணம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது நல்ல பனிப்பொழிவும் குளிரும் காணப்படுகிறது.

குறிப்பாக வட தமிழக பகுதிகளில் நல்ல பனிப்பொழிவு காணப்படுகிறது.

தெற்கு தமிழகத்தில் சில இடங்களில் குறைந்த வெப்ப நிலை வெகுவாக குறைந்துள்ளது. வட தமிழகத்தில் இது சற்று அதிகரித்துள்ளது.

21ம் தேதி காலை வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

வடக்கு உள்புறத் தமிழகத்தில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு குளிர் அலை வீசும்.
 மலைப் பகுதிகளில் சில இடங்களில் அடுத்த 2 ராத்திரிகளுக்கு பனிமூட்டம் அதிகமாக இருக்கும்....